Monday, April 9, 2012

விழியே விதி எழுது #விடைபெறும் வேளை#


This poem had been written on October 3, 2008. Vocalized on 08 April 2012. Hope you guys would enjoy it. Cheers!...

எங்கே தொடங்கி

எங்கே முடிப்பது

இதை எழுத காலம்
கடந்து போயிற்றோ
இதை
எழுத எழுத
சில வாரம் நீழுமோ
வார்த்தை
என்று நினைத்து
தவிர்க்க நினைக்கிறேன்
முடியவில்லை

எதற்காக
இவை எல்லாம்
நடந்து போயிற்று

யாரைக் குற்றம் சொல்வது
இப்போது

அப்போதெல்லாம்
நாம் பேச்சைக் குறைத்திருக்கலாம்
பழகுவதை
நிறுத்தியி
ருக்கலாம்
நான்
கனவுத் திரையில்
உன்னைத் தவிர்த்திருக்கலாம்
உணர்வுகளையாவது கட்டுப்படுத்தியிருக்கலாம்
முடியவில்லயே

கோமோன்கள் எப்போது

நம் நரம்புகளில்
காதல் யோதியேற்றியது

நாம் பேசப் பேச
நம் இடைவெளி
கொஞ்சம் கொஞ்சமாய்
குறைந்து
உறவின் எல்லை
நாம் கடந்துவிட்டதை
நீயாவது உணர்ந்தாயா?
என் உறவுகளில் இருந்து
தூரவிலகிப்போனதை
நானாவது உணர்ந்தேனா

யாருமே இல்லாத
ஒரு உலகத்திற்கு

என்னை கை பிடித்து
அழைத்து வந்துவிட்டு
பாதியில் மறைந்துவிட்ட
பரலோக தேவதையே

என் மீதி வழி

சேர்வதெப்படி - இல்லை
இங்கிருந்து மீழ்வதெப்படி

இப்போதாவது
"என்னை மறந்துவிடு"
என்று சொல்லிவிட்டுப்போ
நீயாவது
விடுவிக்கப்பட்டுவிட்டாய்
என்று
உன் வழியை
ஆசீர்வதிக்கிறேன்
கண்மணி

கண்ணீரோடு போகாதே
ஈரமான
உன் நினைவுகளுடனே
என்னை கொன்றுபோடாதே

எனை போகவேண்டாம்
என்று சொல்
இல்லை

விடை கொடு - போகிறேன்
திரும்பி நின்று
கொஞ்சம் கொஞ்சமாய்
கொல்லாதே

எல்லாவற்றிற்கும்
ஒரு கண்ணீரில்

பதிலளித்து விடுகிறாய்
எனக்குத்தான்
அதன் எந்த அர்த்தமும்
புரியவில்லை

என்று ஒரு பார்வை
கூடப் பார்க்கிறாய்

இதுகூடப் புரியாமலா
என் உயிரையே
உன்னிடம் தந்துவிட்டுப் போகிறேன்

என்ன செய்வது எனக்கு
உன்னைப் போல்
கண்களில்

ஒரு துளி வார்த்தையி
ல்
பதில் சொல்லத்தெரியாதே

நான் பேசி

நீ குலுங்கி என்
மார்பில் கரைந்துவிட்டால்

அதை தாங்கும்
தைரியம்
என்னிடமில்லை

எல்லாவற்றிற்கும்
உனக்குத் தயக்கம்
முதலில் என்னிடம்
உன் காதலைச் சொல்ல
இப்போது
அதை உன்
வீட்டுக்குச் சொல்ல

"எனக்கு நிச்சயமாகிவிட்டது"
என்று
சொல்லிவிட்டாய்

உன்னையும் கொன்று
என்னையும் கொல்ல
இந்த ஒரு வரி விசம்
போதாதா

இத்தனைக்கும்
நீ மட்டுமா காரணம்
நானும்தன்
இன்னும் இரண்டு வருடம்
காத்திருக்கச் சொன்னேன்
காலத்தயா நிறுத்திவைத்தேன்

வயசு ஏற ஏற
எத்தனை வாய்ப்பை
தவறவிடச் சம்மதிப்பார்கள்
உன் பெற்றோர்

காதலில்
இரண்டு வகை அவஸ்த்தை
உண்டு
ஒன்று சேராத காதல்
இன்னொன்று சேராத காதலர்
கள்

கடவுள் இரண்டு வழியாக
காதலர்களை சோதிக்கிறான்
ஒன்று
காதல் கைகூடாமல்
இன்னொன்று
கூடிய காதலர்களை
பாதி வழியில்
பிரித்து

நாம் பறவாயில்லை

காதல் பெருந்துயரத்தில்
தப்பி
பிரிவுத்துயரில் மாட்டியிருக்கிறோம்

நாட்கள்
நகர்ந்து கொண்டேதானிருக்கிறது
நான் மட்டும்
காத்திருக்கிறேன்
நீ விட்டுவிட்டுப்போன
அதே இடத்தில்
நின்று

அன்பே
திரும்பி வருவ
தானால்
சைகை காட்டு
இல்லை
.......................
விட்டுவிடு
நீ வருவாய் என்ற
நம்பிக்கையோடே
என் வாழ்வு நதியில்
நாட்கள் ஓடட்டும்

பிரிகிறபோதும் கூட
பிரார்த்தனை செய்கி
றாய்
அர்ச்சனை செய்துவந்த
பிரசாதத்தை
என் நெற்றியில் பூசிவிடுகிறாய்
இது முற்றுப்புள்ளியா?
இல்லை
இன்னொரு ஆரம்பத்திற்கான
பிள்ளையார் சுழியா

இன்னுமா நீ
கடவுளை நம்புகிறாய்
நம்மை பிரித்ததே
எனதும் உனதும்
கடவுள்கள்தானே

கடவுள்கள்
சமரசம் செய்தாலொழிய
நம் கதை ஓடம்
இன்னொரு நதியில்
நாளை ஓடும்
வேறுசில காதலர் க
ண்ணீரில்

சொல்லியனுப்பு
நீ வருகிற செய்தியை
சொல்லா
தே
என
க்கே
உன் - திருமணத் திகதியை


(விடைபெறும் வேளை - ஒளிப்படம்)

1 comment:

Anonymous said...

Very nice....