Tuesday, October 13, 2009

என் தேவதை கண்விழிக்கிறாள்


மேகமே வழிவிடு
என் தேவதை வருகிறாள்
வானமே வாய்திற
அவள் வாழ்த்துப் பாடு
விண்மீன்களே
கண்சிமிட்டி
அவளை காயப்படுத்திவிடாதீர்கள்
சூரிய நெருப்பே கொஞ்சம்
குளிர்ந்துபோ
நிலவே
உன் மௌனப் புன்னகையால்
அவள் பாதங்களுக்கு
ஒளிபாய்ச்சு
ஓடி விழும் நதிகளே
அவள் இடையின்
நடனதோடு இசைந்துபோங்கள்
புல்வெளியில்
பூத்த முத்துக்களே
அவள் மார்பிற்கு
மணிசூடுங்கள்
பூஞ்செடிகளே
உங்களுக்கு என்ன வேலை
உங்கள் பூக்களை அவிள்த்து
அவள் கூந்தல்ச்செடியில்
கொலுவேற்றுங்கள்
தென்றலே போ
போய் றோஜாக்களில்
ஆடைநெய்துவா
வண்ணத்துப் பூச்சிகளே
நீங்கள் தேனெடுக்கும்
மலரல்ல அவள்
போய் அருகிருந்து
சாமரம் வீசுங்கள்
புறாக்களே
திசைகளெல்லாம் போய்
சேதி சொல்லிவாருங்கள்
சாரல் மழையே
குளிப்பாட்ட நீ தயாராகு
இன்னும் என்ன
புள்ளி மானே
காவலிரு
எல்லாம் சரிதானா
கதிரவனே இப்போது
உன் கதிர்களை வீசு
உங்கள் தேவதை
கண்விழிக்கப்போகிறாள்

Monday, June 8, 2009

காதல் நடந்த சுவடு - 02


1.
சனம் கூடி இழுத்ததில்
தெருவுக்கு வந்தது தேர்
நீ முதன் முதலில்
சேலை கட்டி வந்தாய்
ஊர்ச் சனத்தை இழுத்து
தெருவில் விட்டுவிட்டு

2.
நான்
அழகாகத்தான்
உன்னை இரசித்தேன்
நீதான்
அவசரப்பட்டு
தாவணியை சரிசெய்து
உன்னை
அசிங்கப்படுத்திவிட்டாய்

3.
என் தோட்டத்து
இழவரசிகளில்
ஒருத்தி
மகாராணியாக
முடி சூடப்படுகிறாள்
உன் கூந்தல்
சிம்மாசனமேறி - கூந்தல்பூ

4.
திருவிழாக் கூட்டத்தில்
தேர்கூட சிலவேளை
தொலைந்துபோகும்
நீமட்டும் எப்படி
எந்தத் திசையிலும்
தெரிகிறாய்

5.
பூமரங்களும்
கல் வீசத்தொடங்கிவிட்டன
என் மீது
எனக்கென்ன தெரியும்
அவைகளுக்கும் உனக்கும்
அழகுத்தகராறு சந்தியில்
நிற்குமென்று

6.
பூக்களுக்கும் நான்
பொல்லாதவனாகிவிட்டது
காதலால்தான்
என்னசெய்வது நீ
பூக்களில் வந்து
சிரிக்கிறாய்

7.
உன்
விழிகளின் இராணுவம்
என் வயதை
ஆக்கிரமித்ததில்
மெல்லினச் சிரிப்பு
அணைகிற உன்
உதட்டோரம்
அகதியாக நான்

8.
கடவுள் வருகிறார்
கவனம்
சந்தியில் பேசிக்கொண்டார்கள்
இப்போத்துதான்
கடவுளுக்கு சொல்லிவிட்டு வருகிறேன்
அந்தத் தெருவில்
நீ வருகிறாய்
கவனம்

9.
உன் குரல்
கேட்ட நாழி
என் நாடி நரம்புகள்
உன்னைக் கேட்டு
நச்சரிக்கத் தொடங்கிவிடுகின்றன


10.
என் கனவுகளில்
நீண்ட நாட்களாக
பூப்பறிக்கும் யாரோ ஒருத்தி
காற்று ஆடையாக
நெய்துகொண்டு
அவளை சுற்றிய
நீண்ட தாவணி நளுவி
என் முகத்தில்
விழுகிறது - புன்னகை

11.
உன்
பார்வைகளுக்குப் பயந்து
இமைக்கதவுகளை
இழுத்து மூடி
என் இருதய
இராச்சியக் கோட்டையில்
ஒழிந்துகொண்டேன்
ஆயிரம்கோடி
பூக்கள் அணிவகுத்து
யுத்தம் நடத்தி
ஆட்சி பிடித்து
சிம்மாசனம் ஏறியிருக்கிறாய்
நீ

12.
உன்னை
முளுமையாக
புரிந்துகொண்டவன்
நானில்லை
காரணம் நான்
உன்னை நேசிக்கிறேன்



13.
காதலின்
சிறகு
மனசின் சிறை
அடையுண்டது
எனக்குள் நான்

14.
என்றாவது
ஒரு நாள்
கார்றின் கருவறையில் இருந்து
வயிற்றை கிழித்துக்கொண்டு
வருமா - உன்
மௌனம் வார்த்தைகளாகி

15.
பருவகாலம்
தீர்ந்தபின்
திரும்புகிற பறவைபோல
பிரிந்துசெல்கிறாய் -நீ
தங்கியிருந்த உன்
தடங்களை கலைத்து
அப்படியே போட்டுவிட்டு

16.
உன்
கண்ணாடிக் கண்மலர்
குவளையில்
நிறைந்துபோயிருக்கிறேன்
நான்
எந்த ஒரு
மார்றமும் இல்லாமல் நீ
இருதயப் பாலைவனத்தில்
புதைகுழி ஒன்றை
தோண்டிக்கொண்டிருக்கிறாய்
எனக்காக

17.
வரம்தான் கேட்டேன்
நான்
வரம்தான் கொடுத்தான்
அவன்
வரமாய் கிடைத்த
சாபம் காதல்

18.
யாருமே இல்லாத
ஒரு உலகத்திற்கு
என்னை கைபிடித்து
அளைத்து வந்துவிட்டு
பாதியில் மறைந்துவிட்ட
பரலோக தேவதையே
என் மீதிவளி சேர்வதெப்படி
இல்லை
இங்கிருந்து மீழ்வதெப்படி

19.
நீ
இரவிலும்
நினைவு வெளிச்சம் தந்தது
என் பகல்களையும்
சேர்த்தே இருட்டாக்கவா

20.
உன் புன்னகைகள்
என்னுள்
றோஜாக்களோடு
முட்களையும் பிரசவித்தன
இப்போது
றோஜாக்கள் உதிர்ந்துவிட
முட்களோடு வாழ்கிறேன்
நான்

21.
எப்படியோ
காதலின் ஆயனால்
சபிக்கப்பட்ட நான்
உன்
கனவுகளின் சாத்தானால்
அர்ச்சிக்கப்படுகிறேன்

22.
நாட்கள்
நகர்ந்துகொண்டேதான் இருக்கிறது
அன்பே
நான் மட்டும்
காத்திருக்கிறேன்
நீ விட்டுப்போன
அதே இடத்தில்
நின்று

23.
எந்தச் சில்வையில்
என்னை அறைந்தாலும்
காதலில் உயிர்பெற்று வருவேன்
அன்பே
அடுத்த ஜென்மத்திலாவது
காத்திரு

24.
புனிதமானவற்றை
கடவுளுக்கு கொடுப்பார்கள்
நானும் எனது காதலை
கடவுளிடம் கொடுத்துவிட்டேன்
பலிகடாவாக

மனைவியாய் வரப்போகிறவளுக்கு சொல்ல நினைத்தது


25.
எத்தனை தடவை
நினைத்து நினைத்து
வெட்கி
தலையணைக்குள்
ஒழித்டிருப்பாய்
உன் புன்னகைகளை - என்னை நினைத்து

26.
அம்மனுக்குச் சாத்திய
பட்டுச்சேலை
அத்தனை அழகென்று
ஊரெல்லாம் பேச்சு
இந்த அம்மனுக்கு
யாரிடம்
போட்டி போடுவதென்ற
விவஸ்த்தையே கிடையாது
பார்
இன்றைக்கு
உன்னால் எத்தனை
சேலைக்கடை
கசங்கப்போகிறதோ

26.
உன் புன்னகைகளை
செலவளித்துவிடாதே
பிறகு
என் முத்தங்களை
எங்குபோய் விற்பேன்
நான்

Wednesday, May 27, 2009

மது


தலை கோதி வந்த
காற்றை
இருதயத்திற்குள் கடத்தி
ஒரு நூறு சூறாவளியை
செய்து
என்னை துவசம் செய்துவிட்ட
கோதை - நீ
தெளியாத போதை

0 0 0 0

பேசிக்கொண்டிருந்தோம்
இரவு வந்தது
தூங்கப்போனேன்
விடிந்துவிட்டது

0 0 0 0

இமைத் தூரிகை
வண்ணம்பூசி
சுவரெல்லாம்
உனது பிம்பங்கள்

0 0 0 0

இசைக்கின்ற
காற்றிலெல்லாம்
உன் குரல்
என் செவி நிறைய
குவிந்து கிடக்கின்றன
உனது வார்த்தைகள்

0 0 0 0

இப்பொளுது தான் பேசிமுடித்தோம்
மீண்டும் நலமா என்கிறாய்
காதல்
தீரா நோயாச்சே
நலமாவதெப்படி

0 0 0 0

இது என்ன நியாயம்
உன்னைத்தவிர வேறு யாருடனும்
பேசக்கூடாதென்கிறாய்
மணிக்கொருமுறை சண்டையிட்டுக்கொண்டு
நீயும் பேசமாட்டேனென்கிறாய்

0 0 0 0

ஆயிரம் கட்டளைகளால்
என்னை சிறைவைத்துவிட்டு
நீமட்டும் சுதந்திரமாய்
பறந்துவிடுகிறாய்

0 0 0 0

பெண்களே
பெண்ணிய விடுதலை பற்றி
பேசமுன்பு
வாரத்தில் ஒருமுறையேனும்
உங்கள் காதலர்களுக்கு
கட்டளைச் சிறையிலிருந்து
விடுப்பை அறிவியுங்கள்

0 0 0 0

கண்மணி-

விரும்பிச் சுமக்கின்ற அவஸ்த்தை
காதல்

உன் எல்லா அவஸ்த்தைகளிலும்
இருக்கின்ற வலிதான் காதல்

Sunday, March 15, 2009

காற்று - நான் - அவள்


என் இருதயக் கதவுகளை
ஒருமுறை இறுக்க மூடி
உன்னை நினைக்கிறேன்
என் எல்லாத் திசையிலும்
நீதான் இருக்கிறாய்

என் சர்வமும்
நீயாக உணர்ந்த ஒருபொழுதில்
நான் விடுதலையானேன்
பூலோகத்திலிருந்து

ஆயிரம் சாமங்களின்
தூங்காத் தவிப்போடு
என் கனவொன்றில்
விழித்துக்கொண்டாய் நீ
அந்தக் கனவு
காய்கிறபோது
பூமி மீண்டும்
இருட்டிக்கொண்டது

அதிகாலை மலர்ந்த
பூக்கள்
எதிலுமில்லாத
நறுமணத் தாரகை
ஒன்றை கடந்துவந்த
காற்று
முட்டி மோதி நின்றது என்னில்
திரும்மிப் பார்த்துக்கொண்டே வந்ததில்

தீண்டாத உன்
கைகளின் மென்மையை
தீண்டித் தீண்டி
சொல்லிக்கொண்டிருக்கிறது
காற்று என்னிடம்

என்னை
தொந்தரவு செய்துவிட்டு
காதலாக வீசிய காற்று
மீண்டும் புறப்பட்டது
அவள் சுவசத்தில்
சுதியேற்றிக்கொண்டு

கற்றின் காதலையும்
தழுவலையும்
ஏற்றுக்கொண்டு
கிறங்குகையில்
என்காதலை நிராகரித்தாள்
என் பார்வைகளை
வெளியே தள்ளி
இமைக்கதவுகளை
மூடி