Sunday, February 10, 2013

கனவாய்ப் போனாலும்… நீ

கவிஞர்கள் என்றாலே கண்ணளில் விழுந்து கனவில் எழுவார்கள். வார்த்தைகளை கொண்டு பூமியை ரசித்தே குடித்துவிடுவார்கள் என்றெல்லாம் ஆலாபனை வியாபாரம் செய்வார்கள்.

இது ஒரு ரசிகனின் எழுத்துக்கள். கண்களும் வண்ணத்துப் பூச்சியும் பேசும் கதை இது. கண்களின் ஆழங்கள் பற்றியெல்லாம் அவனுக்கு அக்கறையிருக்காது. மூழ்கி முத்துக் குளிப்பவர்களுக்குத்தானே அந்தக் கவலை. அவன் வேலையெல்லாம் அலைகளோடும் துள்ளி விளையாடும் மீன்களோடும் தான். கண்களில் ஏது அலை! ஏது மீன்கள்! என்பர்களுக்கு போதிமரத்து புத்தன் உபதேசித்தாலன்றி அதுபற்றியெல்லாம் புரிந்துகொள்ள வாய்ப்பில்லை. ரசிக்கத் தெரிந்தவனுக்கு மட்டும் என் எழுத்துக்கள் உன்ணவிருந்து. நல்லவேளையாக, "ரசிக்கத் தெரியாதவன் நேசித்தலாகாது" என்பதுபோல் வரைமுறைகள் ஏதும் எந்த இதிகாசத்திலும் எழுதிவைக்கப்படவில்லை.

விண்மீன்களை பிடிக்க வானுக்கு ஏறவேண்டாம், அதை உன் கண்களிலேயே பிடித்துவிடுவேன் என்பவன் கவிஞன். அந்தக் கவிஞனே அவள் (உன்) கண்களுக்குள் விழுந்தபிறகுதான் தெரிந்துகொண்டான், இதைவிட வானுக்கே ஏறியிருக்கலாம்.

கனவாய்ப் போனாலும்… நீ (உலாப்போகும் கனாத் தீவு!.)

எனக்குள் ஒரு கவிதை, அதன்
பிரசவத்திற்காய் தவித்துக்கொண்டிருக்கிறது

எல்லா சொற்களும்
தண்டனைக் கைதியைப்போல
விலகி நிற்கின்றன,
திரும்பக் குற்றம் இழைத்துவிடுவோமோ
என்கிற பயம்

முழுதாய் நான் நேசித்த ஒரே ஒருத்திக்கு
கடைசியும் முதலுமாக
என் எல்லாப் பிரியங்களோடும்
உன்னை நேசிக்கிறேன்!...

கடைசியும் முதலுமாக
என் அளவற்ற பிரியங்களையெல்லாம்
விட்டெறிந்து
உன்னை வெறுக்கிறேன்

இனிரு நேசித்தலுக்கோ,
வெறுத்தலுக்கோ இடமில்லை...

நான் சுமத்தப்போகும்
எந்தப்பாவமும்
அறிந்திரா - என்
பரிசுத்தமான சிநேகிதி!...

நீ அறிந்திரா மெய் இதுகேள்!

O O O O

பதின்ம ஆ(ற்)றில் - அறிந்தே 
இடி விழுந்தேன்
நரம்பு நதி என்னை
அடித்துச் சென்றது
கரையொதுங்கி எழுந்தால்
இழப்பு - ஒரு நொடிதான்
ஞாபகத்தில்
ஆயிரம் ஆண்டுகளின் நினைவுகள்

சம்மனசுகள் சூழ ஒரு தேவதை
வானில் இருந்து இறங்கி வந்து
என் விரல்பிடித்து நடந்தாள்

பூக்களின் சாரல் விழும்
என் சாலை ஓரங்களில்
அவளதும் எனதும் பாதங்கள் மட்டும்
நிறைந்திருந்தன

ஆயிரம் ஆண்டுகள் தவமிருந்து
ஒருநொடி ரசிக்கலாம்
அவளை


கடவுள்  இரண்டு கண்கள்
கொடுத்ததே...
அவளை
ஒருகன்ணில் வாங்கி
மறுகண்ணில் சேமிக்கவா...

இதுதான் என் கனவு
இந்த மிகச் சாதாரணமானவனை தரிசித்த
தேவதையும் "நீ" தான்!

கோடி ராத்திரிகள் தூங்கி
எழுந்து
பிரசவித்த
ஒற்றை பகல் நீ

இருள் நிலவுகள் ஒளியைப் பொளியுமா
அது உன் கண்களால் மாத்திரம்
சாத்தியமான சங்கதி

தேவதை நீ
வந்தபிறகுதான்
றோஜாச் செடிகள் பேசுமென்றறிந்தேன்

தூங்கிக்கொண்டிருந்த என்
கனவுகள் எல்லாம்
படைக்கப்பட்டன!
நான் சுட்டுவிரல் காட்டும் அந்த நொடியில்
சுவர்க்கங்கள் திறந்துகொண்டன!
காலங்கள் கூட என்வசமே இருந்தன!
என் ஜென்மங்களின்
எல்லாப் பராயங்களிலும் - நான்
சாவகசமாய் உலாப்போனேன்!
எதிர்காலம் என்கிற நெட்டை நெடு வழி மட்டும்
ஏனோ அடைபட்டிருந்தது.

அத்தனையும் படைத்த பிரம்மாவாக நீ
பக்தபித்தனாய் நான்!

O O O O

பின்பொரு பொழுதில்
இதை  நீ உணர்த்தினாய்


உயிர் கொல்லும்
அழகிய விசம்
அந்தக் கண்கள்

O O O O

துள்ளிக்குதித்து வந்த
மனசை ஒரே சொல்லில்
வெட்டிச் சாய்த்தாய்,

ஒரு பலியாட்டைப் போல!

துடித்து வீழ்ந்தது காதல்!
கரைந்து கசிந்தன கனவுகள்...

தனிமையில்
நீழவழி நடந்தன இரவுகள்

நாட்கள் எல்லாம் என்னை கடந்து போயின
நினைவுகள் என்னை கடத்திப் போயின!

அன்பெனும் மொழி அகதியாயிற்ற
அனாதையாய் என் செல்லக் கவிதைகளும்
ேர்ந்ேசும்...

O O O O

ஏதேன் தோட்டத்து
விலக்கப்பட்ட கனிதான் காதலோ!..

பரிசளிக்கப்பட்ட அத்தனை இன்பங்களையும்
பறித்துக்கொண்டு
சாத்தான்களிடம் என்னை ஒப்படைத்துச் செல்கிறாய் நீ

இன்னும் சம்மனசுகளை அனுப்பி என்னை
மீட்டுச் செல்வாய் என்கிற கனவுகளோடு நான்.

O O O O

நான் உன்னை நேசித்தேன்
யாரும் மனிதர்கள் அறிந்திரா பிரியம் அது
நான் உன்னை நேசித்தேன்
என் எல்லா வார்த்தைகளிலும் நீயே இருந்தாய்
என் ஒவ்வொரு அசைவையும் தீர்மானித்தவள் நீதான்
என் நரம்புகளின் இசைச் சுரங்களுக்கு
காரணமாய் இருந்தவள் நீ
என் காலங்களில் - நீமட்டும்தான் இருந்தாய்.
எனது பிறப்பே உன்னை சந்திப்பதற்காகத்தான்
பரலோகத்திலிருக்கின்ற பிதாவால்
எனக்காய் நீயும், உனக்காய் நானும் படைக்கப்பட்டோம்
என்பதாக எண்ணிக்கொண்டிருந்தேன்

நீ என்னை பிரிந்தாய் - தினம்
ஏதோ ஒரு நினைவில் என்னை
தூக்கிலிட்டாய்!..

அப்போதே எனது உலகம் சரிந்து
மூடியிருக்கலாம்!.....

விலகிவிடாதே
உன்னை ரசித்தவன் நான்
என் எல்லா பிரியங்களையும்
உன்னிடம்தான் நான்
செலவழித்துவிட்டிருக்கிறேன்
என்று கெஞ்சிக்கொண்டிருந்தன
என் புலன்களுக்குட்பட்ட - எல்லா
ஜீவ அணுக்களும்

நீயோ சாவகசமாச் சென்றுகொண்டிருந்தாய்!...

O O O O

எப்போதோ,
ஏதோ கொஞ்ச நாள்
வீடொன்றில் வாடகைக்கிருப்பவன் எவனும்
தன்
எஞமானன் வருகையின்போது
வெளியேற்றப்படுவான்
என்பது இயல்பு

காதல்வீட்டிற்கொன்று
இதில்
விதி விலக்கேது

O O O O

இனி நான் உன்னை ரசிக்கமுடியாது
இனி நான் உன்னை தியானிக்கமுடியாது
எனது பார்வையில்
இனி உன் விழிகள் சிக்கப்போவதில்லை
ஆனாலும்,

ஆனாலும்!……
என்னைத் தவிர
உன்னை யாரும்
அழகாய் பார்த்திருக்கமுடியாது.
என்னைத்தவிர உன்னையாரும்
ஆழமாய் நேசித்திருக்க  முடியாது.

O O O O

எனக்குத் தெரியும்
இந்த நாள் வரும் என்று....

பகல் இரவாயும்
இரவு பகலாயும் மாறி மாறி
பூமியின் முகம் கபட நாடகமாடும்போதே
எனக்குத் தெரியும்
இந்தப் பிரியமும் அழிந்து போகுமென்று


எனக்குத் தரமுயாத என்மீதான் உன் பிரியத்தால் என்ன பயன்?...
 எனக்கு தரக்கூடிய உன் வெறுப்பை தா.
அதுதான் உன்னிடமிருப்பதில் எனக்குச் சொந்தமானது.

O O O O

இதுபோலத்தான்
வண்ணத்துப் பூச்சிக் காதலும், கதைகளும்…

பூமியில் ஒளி விழுந்தால்தான்
அதற்கு நிறங்கள் கிடைக்கின்றன
ஒளி விழாதுபோனால்
பூமியின் முகத்திற்கு நிறமே இல்லை

ஒளி விழாத பூக்களை
வண்ணத்துப்பூச்சிகள் நாடுவதில்லை

நான்
ஒளியே இல்லாத ஓர் உலகத்திலிருந்து
என் காதலை உணரும்
வித்தை கற்க தயாராகிறேன்

ஜீவ ஒளியில் காண்கிற காட்சியே நிஜம்
இரண்டு ஜீவ ஒளிகள் கலக்கும் ஜோதியே
மெய்க்காதல்

O O O O

விலகிவிடாதே
உன்னை ரசித்தவன் நான்
என் எல்லா பிரியங்களையும்
உன்னிடம்தான் நான்
செலவழித்துவிட்டிருக்கிறேன்
என்று கெஞ்சிக்கொண்டிருந்தன
என் புலன்களுக்குட்பட்ட - எல்லா
ஜீவ அணுக்களும்

நீயோ சாவகசமாச் சென்றுகொண்டிருந்தாய்...
O O O O
சிநேகத்துடன்
ப.அருள்நேசன்
10 Feb 2013

Tuesday, June 12, 2012

நீ இன்னொரு நான்

தான் பெற்றெடுக்க இருக்கும் தன் மகனோடு பேசும் ஒரு பெண்ணின் பரிபாசை இது. உலகத்தையே அன்னியப்படுத்திவிட்டு தனக்கென ஒரு உலகம் படைப்பதாய் காண்கிறாள். அதன் அறிமுகம்தான் இந்தக் கவிதை. 
 
 
 

   

(நீ இன்னொரு நான் - ஒளிப்படம்)  

எனக்குள் இருக்கும்
இன்னொரு மனிதா
இன்று நான் உன்னை
காணப்போகிறேன்!...

இராப்பகலாய் இம்சைகள் செய்தாய்,
இனிக்கும் கனவுகள் தந்தாய்,
நீ யாரோ இல்லை - நானேதான்

என்னை நானே காணவரும்
சந்தர்ப்பம்,
என்னுள் நானே சிரிக்கிறேன்...
எனக்கே சொல்லி அழுகிறேன்
சொல்லத் தெரியவில்லை...

இதை என்ன உணர்வென்று
சொல்லத் தவறிவிட்டது - என் மொழி

நீ இன்னொரு நான்

என்னைப் போலவே நடை,
என்னைப் போலவே பேச்சு,
இப்படி எத்தனையோ - என்னைப் போலவே...
குணங்களில் வரும்
புதிய நான்

நீ அடம்பிடித்தாலும்
உன்னை போகவிடமாட்டேன்...
என் உள்ளேயே இரு....
வேண்டுமானால், கோபம் தீர
உதை ஒன்று தா - உள்ளே
ஒரு சுற்று, சுற்றிவா...
எந்த வலியையும்
தாங்கிக்கொள்கிறேன் - என் செல்லமே
இன்னும் கொஞ்சநாள்
எனக்குள்ளேயே இரு

உனக்காக பத்தியமிருந்து,
உனக்காக மகிழ்ந்திருந்து,
உனக்காக தூங்கி, விழித்து...
இப்படி உனக்காய் -  என்னில் நான்
பணிவிடை செய்துவளர்க்கும்
என் தெய்வம் நீ
நான்தான் உன் கோவில்

உன்னை யாரிடமும் தர மனமேயில்லாமல்
நான் மட்டும் நேசிக்க, 
நான் மட்டும் ரசிக்க...
மறைத்துவைத்த காலம்
பத்தே மாதங்களா...
அது என் பாதி  யென்மம்

என் நினைவெல்லாம்...
நானும் - நீயும்
என் பொளுதெல்லாம்
உனக்கும் - எனக்கும்
நான் சேமித்துவைத்திருக்கும்
பிரியங்கள் எல்லாமே.. உனக்கேதான்
செலவுசெய்ய வா என் செல்லமே...

உன்னை
கொஞ்சுவதற்கு கொஞ்சம்...
கெஞ்சுவதற்கு கொஞ்சம்...
திட்டுவதற்கு கொஞ்சம் என்று
நான் செய்து வைத்த வார்த்தைகள் கொஞ்சமா?...
காணும் கனவுகள் எத்தனை!....
என்றாவது புரியுமா உனக்கு

OOOO

நீ யாரென்று
உனக்க்கும் - இந்த உலகிற்கும்
நான் தான் அறிமுகம் செய்யப்போகிறேன்

நீ என் தேவகுமாரன்
நீ என் ராஜகுமாரன்
நீ என் ஜீவநாதம்
நீ என் குட்டிச்செல்லம்
நீ என் செல்லமகன்

நீ என் சின்ன எதிரி - என் செல்ல நண்பன்

என் குளந்தைப் பிம்பம் - நீ
கடவுள் உருவம் - நீ

புன்னகை நிறைந்த
பூங்குவளை...
தவள்ந்து வளரும் றோஜா...
தத்தி நடக்கும் தங்கமயில்...
உன் மழலை மொழிக்கு -  இந்தப் பூமியே விலை

செல்லச் சிரிப்பால் மோட்சங்களை
வாங்கிவரும் சம்மனசு - நீ

எனை அழுது தண்டிக்கும் ஆசான் - நீ

நினைத்தே ரசிக்கும் சிசுவும் நான்
உன்னை நெஞ்சில் வைத்து கொண்டாடும் தாயும் நான்

OOO

நான் படைக்கும் என் புதிய உலகமே
வர இருக்கும் என்
ராஜகுமாரனே
அம்மாவின் கோரிக்கைகள் கொஞ்சமிருக்கிறது...
கேளடா

என்னோடு சிறிதாய்
சண்டைபோடு...
செல்லமாய் அதட்டு...
என் மனசை உடை... நீயே வந்து பொருத்து
திரும்ப உடை....
இவைகளுக்காகவும்தான்
என்னை தயார்ப்படுத்தி வைத்திருக்கிறேன்
ஏமாற்றிவிடாதே!...

வார்த்தைகள் உள்ளே தீண்ட
விழியால் வெளியே குத்தி
முகத்திலிருந்து கழராத புன்னகை செய்

நான் உலகை மறந்துபோகிற - உன் தியானத்திலிருக்கும் பொளுது
வந்து சீண்டி என் நினைப்பைக் கலை!

இந்தச் சந்தோசத்தை
இழுத்து இழுத்து... என் ஆயுள்வரை மூடு
இது உன் உயிரின் கூடு - என் செல்ல மகனே


எப்போதும் என்னை பிரியாதிரு...

செல்லக் கொஞ்சல்களுக்காக
என்னை - அலையவைத்து
அதிகமாய் அழவைத்துவிடாதே...

நீ வளர்ந்து பெரியவனாகி
என்னை உன் மகளாய் கொள்ளவேண்டும்
செய்வாயா?...
என் செல்ல மகனே...

 

Monday, April 9, 2012

விழியே விதி எழுது #விடைபெறும் வேளை#


This poem had been written on October 3, 2008. Vocalized on 08 April 2012. Hope you guys would enjoy it. Cheers!...

எங்கே தொடங்கி

எங்கே முடிப்பது

இதை எழுத காலம்
கடந்து போயிற்றோ
இதை
எழுத எழுத
சில வாரம் நீழுமோ
வார்த்தை
என்று நினைத்து
தவிர்க்க நினைக்கிறேன்
முடியவில்லை

எதற்காக
இவை எல்லாம்
நடந்து போயிற்று

யாரைக் குற்றம் சொல்வது
இப்போது

அப்போதெல்லாம்
நாம் பேச்சைக் குறைத்திருக்கலாம்
பழகுவதை
நிறுத்தியி
ருக்கலாம்
நான்
கனவுத் திரையில்
உன்னைத் தவிர்த்திருக்கலாம்
உணர்வுகளையாவது கட்டுப்படுத்தியிருக்கலாம்
முடியவில்லயே

கோமோன்கள் எப்போது

நம் நரம்புகளில்
காதல் யோதியேற்றியது

நாம் பேசப் பேச
நம் இடைவெளி
கொஞ்சம் கொஞ்சமாய்
குறைந்து
உறவின் எல்லை
நாம் கடந்துவிட்டதை
நீயாவது உணர்ந்தாயா?
என் உறவுகளில் இருந்து
தூரவிலகிப்போனதை
நானாவது உணர்ந்தேனா

யாருமே இல்லாத
ஒரு உலகத்திற்கு

என்னை கை பிடித்து
அழைத்து வந்துவிட்டு
பாதியில் மறைந்துவிட்ட
பரலோக தேவதையே

என் மீதி வழி

சேர்வதெப்படி - இல்லை
இங்கிருந்து மீழ்வதெப்படி

இப்போதாவது
"என்னை மறந்துவிடு"
என்று சொல்லிவிட்டுப்போ
நீயாவது
விடுவிக்கப்பட்டுவிட்டாய்
என்று
உன் வழியை
ஆசீர்வதிக்கிறேன்
கண்மணி

கண்ணீரோடு போகாதே
ஈரமான
உன் நினைவுகளுடனே
என்னை கொன்றுபோடாதே

எனை போகவேண்டாம்
என்று சொல்
இல்லை

விடை கொடு - போகிறேன்
திரும்பி நின்று
கொஞ்சம் கொஞ்சமாய்
கொல்லாதே

எல்லாவற்றிற்கும்
ஒரு கண்ணீரில்

பதிலளித்து விடுகிறாய்
எனக்குத்தான்
அதன் எந்த அர்த்தமும்
புரியவில்லை

என்று ஒரு பார்வை
கூடப் பார்க்கிறாய்

இதுகூடப் புரியாமலா
என் உயிரையே
உன்னிடம் தந்துவிட்டுப் போகிறேன்

என்ன செய்வது எனக்கு
உன்னைப் போல்
கண்களில்

ஒரு துளி வார்த்தையி
ல்
பதில் சொல்லத்தெரியாதே

நான் பேசி

நீ குலுங்கி என்
மார்பில் கரைந்துவிட்டால்

அதை தாங்கும்
தைரியம்
என்னிடமில்லை

எல்லாவற்றிற்கும்
உனக்குத் தயக்கம்
முதலில் என்னிடம்
உன் காதலைச் சொல்ல
இப்போது
அதை உன்
வீட்டுக்குச் சொல்ல

"எனக்கு நிச்சயமாகிவிட்டது"
என்று
சொல்லிவிட்டாய்

உன்னையும் கொன்று
என்னையும் கொல்ல
இந்த ஒரு வரி விசம்
போதாதா

இத்தனைக்கும்
நீ மட்டுமா காரணம்
நானும்தன்
இன்னும் இரண்டு வருடம்
காத்திருக்கச் சொன்னேன்
காலத்தயா நிறுத்திவைத்தேன்

வயசு ஏற ஏற
எத்தனை வாய்ப்பை
தவறவிடச் சம்மதிப்பார்கள்
உன் பெற்றோர்

காதலில்
இரண்டு வகை அவஸ்த்தை
உண்டு
ஒன்று சேராத காதல்
இன்னொன்று சேராத காதலர்
கள்

கடவுள் இரண்டு வழியாக
காதலர்களை சோதிக்கிறான்
ஒன்று
காதல் கைகூடாமல்
இன்னொன்று
கூடிய காதலர்களை
பாதி வழியில்
பிரித்து

நாம் பறவாயில்லை

காதல் பெருந்துயரத்தில்
தப்பி
பிரிவுத்துயரில் மாட்டியிருக்கிறோம்

நாட்கள்
நகர்ந்து கொண்டேதானிருக்கிறது
நான் மட்டும்
காத்திருக்கிறேன்
நீ விட்டுவிட்டுப்போன
அதே இடத்தில்
நின்று

அன்பே
திரும்பி வருவ
தானால்
சைகை காட்டு
இல்லை
.......................
விட்டுவிடு
நீ வருவாய் என்ற
நம்பிக்கையோடே
என் வாழ்வு நதியில்
நாட்கள் ஓடட்டும்

பிரிகிறபோதும் கூட
பிரார்த்தனை செய்கி
றாய்
அர்ச்சனை செய்துவந்த
பிரசாதத்தை
என் நெற்றியில் பூசிவிடுகிறாய்
இது முற்றுப்புள்ளியா?
இல்லை
இன்னொரு ஆரம்பத்திற்கான
பிள்ளையார் சுழியா

இன்னுமா நீ
கடவுளை நம்புகிறாய்
நம்மை பிரித்ததே
எனதும் உனதும்
கடவுள்கள்தானே

கடவுள்கள்
சமரசம் செய்தாலொழிய
நம் கதை ஓடம்
இன்னொரு நதியில்
நாளை ஓடும்
வேறுசில காதலர் க
ண்ணீரில்

சொல்லியனுப்பு
நீ வருகிற செய்தியை
சொல்லா
தே
என
க்கே
உன் - திருமணத் திகதியை


(விடைபெறும் வேளை - ஒளிப்படம்)